Thursday 30 January 2014

மச்சு பிச்சு : வியப்பூட்டும் சில தகவல்கள்..!!... 



வரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். 

இவற்றுள் நமக்குப் “பார்த்தவுடனே” பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைபறைசாற்றி நிற்கின்றன... 



மச்சு பிச்சு!! தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட “இன்கா பேரரசால்” கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் “மச்சு பிச்சு” நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?... 


செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!... 


சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.... 


தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.... 


இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?... 


பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். 

வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். 

சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர் ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. 

இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.... 


ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ? இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது “மச்சு பிச்சு”. 



பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.... 


மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது.... 


தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்!! பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்…... 


இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி... !!

http://edhugai.blogspot.in/2014/01/blog-post_30.html

Wednesday 29 January 2014


ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான். அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று. 
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்: நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்! ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை! ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள். 



மேலும் பார்ப்போம்… நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும். அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார். கற்பனையிலேயே ஒரு புது முகத்தை எமது மூளை தயாரிப்பதில்லை. எமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் எமது மூளை கனவுகளை உருவாக்கின்றது. 

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்கமுடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா? உண்மை சொல்லப்போனால் அது கூட முடியும்! „Lucid Dreaming“ என குறிக்கப்படும் முறையை கற்றுக்கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்… 


இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTubeஇல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது. 

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…? 12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்… நீங்க என்ன மாதிரி? Color கனவா Black & White கனவா காண்கிறீங்க? 

இந்த அறிவு டோஸ் பிடித்ததா? பிடித்து இருந்தால் ஒரு Like போட்டுவிட்டு Share பண்ணுங்கள்.

நாஸ்கா கோடுகள்

--------------------------


இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது.





பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திர்க்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவேளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான மனைகொடுகள் அவை. 1994 ல் "உலக தொல்லியல் பாரம்பரிய தளம்" என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

(குரங்கைப்போன்று அமைந்துள்ள கோடுகள்)

(பிரமிட்போன்று அமைந்துள்ள கோடுகள்)

(மனிதனின் கைகள் போன்று அமைந்துள்ள கோடுகள்)

(சிலந்தி போன்று அமைந்துள்ள கோடுகள்)

(பாடும்பறவை போன்று அமைந்துள்ள கோடுகள்)

( நாய் போன்று அமைந்துள்ள கோடுகள்)

நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர். 

பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?

இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.
Posted by sundar on 05:41 in ,    No comments »

Tuesday 28 January 2014


ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..(விடைதெரியா மர்மங்கள் )...


சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 



ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார். மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா 



(BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது...அந்த குகையில் பல சவக்குழிகள் இருந்தன. ஒவ்வொரு சவக்குழியிலும் மூன்றடி உயரமே உள்ள எழும்புக்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றின் மேலும் ஒரு அடையாளம் போல் இந்த வட்ட கல் தட்டுகள் இருந்தன. வட்ட தட்டில் சீரான வட்டத்துளை மையத்தில், மையத்தில் இருந்து சுழற் சுற்று கோடுகள் இருந்தன. (பழைய இசைத் தட்டுகள் போல.) பார்பதற்கே அவை கோடுகள் போல இருந்தன ஆனால் அவை (மைக்ரோ) மிக நுண்ணிய புரியாத குறியீட்டு எழுத்துக்கள்...

இவருக்கு பின், பெய்ஜிங் தொல்லியல் அகாடமியை சேர்ந்த பேராசிரியர் சும்-உம்-நூய் (Professor Tsum Um Nui, of the Beijing Academy for Ancient Studies ) இதுபற்றிய சில விளங்கங்களை கொடுத்தார்.

இந்த எலும்பு கூடுகள் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் பெரிய தலைகளை கொண்ட குள்ளமான அசிங்கமான தோற்றத்தினர். மேலும் அந்த வேற்றுகிரக வாசிகளை ட்ரோபா மலைவாழ்மக்கள் தங்கள் மூதாதையர் என நம்பியதாகவும் தெரிகிறது. அதனாலேயே இந்த வட்டக்கல் தட்டுகள் ட்ரோபா கற்கள் என பெயரிடப்பட்டது. ஏதோ விபத்து அல்லது ஏதேனும் காரணத்தினால் இறந்து போயிருக்கலாம் என்றும் சொன்னார்.

ஆரம்பத்தில் இந்த மண்டை ஓடுகள் மனிதக் குரங்கினுடையது (ஏப் வகை) என்றே நினைத்தனர்....பின்னர்,இந்த தட்டுகளின் காலங்கள் 10000 முதல் 12000 வருடங்களுக்குள் இருக்குமென கணிக்கப்பட்டது. அந்த குகைசுவர்களில் பூமி, உதய சூரியன்,நிலா,நட்சத்திரங்கள் இன்னும் ஏதேதோ புரியாத குறியீடுகள் இருக்கிறதாம், ஒரு வரைபடம் போல. வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது. 



இந்த வேற்று கிரக வாசிகள் இக்குகைகளில் இருந்த பழங்குடிகளை கொன்று விட்டார்கள் அதோடு அவர்கள் திரும்பி போக வாகனம் இல்லாமல் இறந்து போயிருக்கலாம்..சுற்றியிருந்த மலைவாழ்மக்கள் அவர்களை ட்ரோப்பாக்கள் என்கின்றனர் ( கர்ண பரம்பரைக் கதைகளும் உண்டு !! ). 1965 ல் மேலும் 716 வட்டத்தட்டுகள் இந்த குகையில் கிடைத்ததாம். தட்டுகளில் கோபால்ட் மற்றும் பல உலோக கூறுகள் உள்ளன. மின்சாரம் செலுத்தப்பட்டால், 

இதனுடாக கடத்தப்படுகிறது. வெவ்வேறு குறியீடுகள் ஒவ்வொரு தட்டிலும் இருப்பதால் இது ஏதேனும் சர்க்யூட்டாக இருக்குமோ ? என்ற சந்தேகமும் உள்ளது. (oscillograph)ஆசிலோகிராப் கொண்டு சோதனை செய்யப்பட்டதில் ” ஹம் “ என்ற ரிதம் மட்டுமே உணரப்பட்டது....1965 உடன் இதைப்பற்றிய ஆராய்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது. 

படத்தில் காணப்படும் இந்த கற்கள் இப்போது இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்போதைய கால கட்டத்தில் (1938ல்) இவை அனைத்தும் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின் என்ன ஆயிற்று ? தெரியவில்லை ஆனால் இந்த நிழற்படம் மட்டுமே எஞ்சியுள்ளது...



இரும்புத்திரை நாடும், பெருஞ்சுவர் நாடும் இரகசியம் காத்தன. விடை தெரியாத மர்மங்களில் இதுவும் ஒன்று..
Posted by sundar on 21:51 in ,    No comments »
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.


குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

Monday 27 January 2014

வேற்று கிரக வாசிகளின் மறைக்கப்பட்ட உண்மைகள் – வீடியோ

வேற்றுக்கிரக வாசிகளா அப்படி இந்த அண்டவெளியில் யாருமே இல்லை என்று நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள். area 51 என்று சொன்னால் வதந்தி என்று கூறி அங்கு நடப்பவற்றை மூடி மறைக்கிறார்கள்.


இங்கே இருக்கின்ற வீடியோக்கள் பல உண்மையை உலகிற்கு area 51 இல் நடந்தவற்றை சொல்லிகிறது. இந்த வீடியோக்கள் 1950 – 1960 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்டு இருக்கின்றது.
அன்று எடுத்த வீடியோக்கள் இப்பபொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இந்த area 51 யார் வேலை செய்கிறார்கள், இதன் உண்மையான திட்டம்தான் என்ன?
மனித குலத்திற்கு தெரியாமல் மறைத்து மறைத்து எடுக்கும் முடிவுகள் இந்த உலகின் அனைத்து உயிரனத்திற்கும் பாதிப்பு வராமல் இருக்கும் வரைக்கும் நல்லாத்தான் இருக்கும்…. வீடியோக்களை பாருங்க.







Posted by sundar on 21:05 in    No comments »

Sunday 26 January 2014

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் கொடுங்கோலர் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது.

ஆனால் தற்போது Simoni Renee Guerreiro Dias என்ற எழுத்தாளர் எழுதி தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில் ஹிட்லர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அதன்பின்னர் அவர் கருப்பின காதலி ஒருவருடன் பல வருடங்கள் வாழ்ந்து தனது 95வது வயதில் 1984ல் தான் மரணம் அடைந்தார் என்று கூறியுள்ளார். இதனால் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் தற்கொலை நாடகம் நடத்திய ஹிட்லர், சுரங்கப்பாதை வழியாக தப்பியோடி அர்ஜெண்டினா, பராகுவே நாடுகளுக்கு சென்று பின்னர் பிரேசில் நாட்டில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்ந்ததாக அந்த எழுத்தாளர் பல படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்.
ஹிட்லர் தனது தலைமுறை வாழ்க்கையில் மீசையை எடுத்துவிட்டு, கருப்பின காதலி ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஆதாரத்துடன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஹிட்லர் பயன்படுத்திய உடைகள் மற்றும் அவருடைய புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posted by sundar on 22:34 in    No comments »
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வேற்றுகிரக பாதுகாவலர் 

அமெரிக்க அதிபர் ஒபாமா AIPAC 2013 கலந்துரையாடலில் பங்கேற்று பேசும்பொழுது பிடித்த கானொளியில் ஒபமாவின் பாதுகாவலர் ஒருவர் வித்தியாசமான முக அமைப்புடன் காணப்பட்டார் அவரது நடவடிக்கையும் சாதரணமாக இல்லை . அவர் ஒபமாவின் வேட்ட்ருகிரக ரகசிய பாதுகாவலராக இருக்கலாம் என பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் கூரபட்டுவருகின்றது .இந்த காணொளியை நீங்களே பாருங்கள் சட்ட்று உற்று நோக்கினால் அவரது முக அமைப்பு மாறுவது தெரியும்.



Posted by sundar on 09:09 in    No comments »
251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் : நம்பினால் நம்புங்கள்.!... 


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?? நம்பித்தான் ஆகவேண்டும். சீனாவைச்சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர். இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில் இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....
Posted by sundar on 09:00 in ,    No comments »

Saturday 25 January 2014

பத்மபூஷண், பத்ம விபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திரைப்பட நடிகர், இயக்குநர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் இசைக் கலைஞர் விக்கு வினாயக் ராம், மற்றும் நடனக் கலைஞர் பேகம் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 25 பேர் பத்மபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுளள்ளனர்.
இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகை வித்யா பாலன், நடிகர் பரேஷ் ராவல், இயக்குநர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட 101 நபர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.


பத்மபூஷன் விருது : இயக்குநர் கமல்ஹாசன்

நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு வணக்கம், பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு, முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். 

அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி இந்த பட்டத்திற்க்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது, நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு. பத்மபூஷன் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு.
Posted by sundar on 09:37 in    No comments »
ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்! மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.... 



ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்.... 

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார். வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.... 

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள். சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.... 


இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்... 

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.... 

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.... 

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.... 

“கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.... 

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.... 

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும். “அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!...

Friday 24 January 2014

திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றது.



இந்த நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக்குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும், திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச்சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை,கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு
முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, காரசார விவாதம் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே, மு.க.அழகிரியைத் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக அறிவிப்பு வெளியிட்டது.
சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அழகிரி, திமுக கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்து அதிருப்தியைப் பதிவு செய்தார்.
இதனிடையே, மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து திமுக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கி.வீரமணி வரவேற்பு
திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந்நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.
குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது. திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது" என்று வீரமணி கூறியுள்ளார்.
Posted by sundar on 01:56 in    No comments »
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. 






இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை. குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.

Thursday 23 January 2014

சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்‌ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.


ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த கோயிலில் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
பம்பாபதி என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் முக்க மண்டபம் (ரங்க மண்டபம்) என்று அழைக்கப்படும் கருவறை, மூன்று வாயில் அறைகள் மற்றும் தூண்களை கொண்ட ஒரு மண்டபம் போன்றவை காணப்படுகின்றன.விருபாக்‌ஷா கோயில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோயில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. ரங்க மண்டபம் எனப்படும் கருவறையானது கிருஷ்ணராய தேவராயரால் 1510ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக இது விஜயநகர கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு அமைந்துள்ளது. தூண்கள், கோயில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹிந்து புராணங்களில் வரும் விலங்குகளின் உருவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குது.!!! ???

.....தமிழன்.... டா...!!! ???



Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாண சுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்ததுராஜ்
Posted by sundar on 00:16 in    No comments »

Wednesday 22 January 2014

மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தொலைவிலும் லோனாவலா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த கவின் கொஞ்சும் மலைவாசஸ்தலம் சந்தடி மிகுந்த நகரச் சூழலிலிருந்து முற்றிலும் விலகி, வருடம் முழுவதுமே மாசற்ற சுற்றுப்புறச்சூழல், தூய்மையான காற்று, இனிமையான பருவநிலை ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளதால் ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.




இதன் காரணமாக இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஆண்டுதோறும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது.
நம்ம இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகினத்தோம் போட்டு கிட்டு இருக்கோம்,இது பற்ரி போன வருஷம் நான் சொன்னேன் 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு, அடுத்து கொஞ்ச நாள்ல சோனி ஜப்பான்ல 2ஜிபி ஸ்பீடு கொடுத்தையும் சொன்னேன், இப்ப லண்டன்ல நம்ம பழைய கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேத்து உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டாங்க.

jan 23 - ravi
அதாங்க கிலோபைட் போய் மெகாபிட்போய் ஜிகாபைட்டும் போய் கடைசியில டெராபைட்ல வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 – ஒரு லட்சத்து 83 ஆயிரத்து ஐநூறு= ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் – சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிஞ்சிடுற ஸ்பீடு.
இதை நேத்து பிரிட்டிஷ் டெலிகாம் லண்டன் மெயின் டவர்ல இருந்து – ஐபி ஸ்விட்ச் என்னும் இடத்தின் இடைவெளியான 410 கிலோமீட்டர் தூரத்துக்கு டெஸ்ட் பண்ணியிருக்காங்க – ஹைடெஃபினீஷன் படத்தை ஸ்ட்ரீம் பண்ணி டெஸ்ட் பண்ணிருக்காங்க் டெஸ்ட் சக்ஸஸ் – ஆல்காடெல் – லூசன்ட் இதற்க்கான உபகரணங்களை செஞ்சிருக்கு – வெகு சீக்கிரம் ஒரு 50 வருஷத்துக்குள்ள நம்ம இந்தியாவுக்கு ஸ்பீடா வந்திரும்னு நம்புவோம்னு ஒரு பெருமூச்சோட பை பை.
World’s Fastest Internet Test from London – Ipswitch was success yesterday.
*****************************************************************************
The “fastest ever” broadband speeds have been achieved in a test in London, raising hopes of more efficient data transfer via existing infrastructure.Alcatel-Lucent and BT said speeds of 1.4 terabits per second were achieved during their joint test – enough to send 44 uncompressed HD films a second. The test was conducted on a 410km link between the BT Tower in central London and Ipswich. The high speeds were achieved using existing fibre cable technology that has already been installed in much of the UK and other parts of the world. I hope we would able to get this technology in less than 50 years……………….Have a GOOD ONE.
Posted by sundar on 21:14 in    No comments »

Sunday 19 January 2014

உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று .
 ஈஸ்டர் தீவா ? அது எங்கே இருக்கிறது ? 

பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே 2200 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒதுக்கு புறமான தீவாகும் இது. 1722 ஆம் ஆண்டு ஈஸ்டர் திருநாளன்று ஒலாந்தரால் இத்தீவுகண்டுபிடிக்கபட்டது . இதனால் இத்தீவிற்கு ஈஸ்டர் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.

     இத்தீவின் பரப்பு 63 சதுர கி.மீ  என்று கணக்கிடப்பட்டுள்ளது. சரி இத்தீவில் அப்படி என்னதான்மர்மம் காணப்படுகிறது ?

இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது . இவை அனைத்தும்  தீவின் மத்தியப்பகுதியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் சுமார் 10 முதல் 40 அடி வரைகாணப்படுகிறது. அதிக பட்சம் சிலை ஒன்றின் எடை 5
 டன் வரை உள்ளதாகவும் இருக்கிறது.ஒவ்வொரு சிலையும் இடுப்பளவே செதுக்கப்பட்டுள்ளது .

 இதனை மனித உருவச் சிலைகளை ஏன் செய்தார்கள் ? அதனை எதற்காக 
இங்கே வருசையாகநிற்க வைத்தனர் ? இதற்கான உண்மையான காரணம்
 என்ன ?
      
    

இதற்கான சரியான விடை இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
இது தொடர்பாகநிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டும் வருகின்றன . ஆனாலும்
 யூகத்தின் அடிப்படையினகணிப்புகளை மட்டுமே அவர்களால் வெளியிட 
முடிந்துள்ளன.

இது குறித்து பல தொல்பொருள் ஆய்வாளர்கள் என்ன மாதிரியான 
கருத்துக்களைவெளியிட்டுள்ளனர் தெரியுமா ? கி.பி 400 ஆம் ஆண்டில் 
போளிநேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் கடலில் காணப்பட்ட மின்னோட்டம்காரணமாக தவறுதலாக இந்த தீவிற்கு வந்துள்ளனர் . அதன் பின்னர்தான் 
அவர்களால் இங்கிருந்துசெல்ல முடியவில்லை. எனவே வேறு வழியின்றி 
இத்தீவிலே நிரந்தரமாக தங்கிட நேர்ந்தது என்றுகருதுகின்றனர்.

    ஈஸ்டர் தீவின் மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக 
இருந்திருக்கின்றனர் . அவர்கள்வற்றாளை கிழங்கு என்ற ஒரு வகை 
கிழங்கையே உணவாக பயன் படுத்தியுள்ளனர். இதுஅமெரிக்காவில் தான் 
காணப்படுகின்றது இது எவ்வாறு இத்தீவிற்கு வந்ததென்று தெரியவில்லை .



ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் ஆண்டு கொண்டிருந்த பொழுது 
இத்தீவிற்க்கும் வந்துசேர்ந்தனர் . அப்பொழுது இங்கே வசித்தவர்கள் 
அநேகமாக இறந்து விட்டதாக கருதப்படுகின்றது . இதுகுறித்து உண்மைத் தகவல்கள் தெரியவில்லை.

இங்கு காணப்படும் மனிதச் சிலைகள் அனைத்திலும் காதுகள் நீண்டதாக 
தெரிகிறது.பாலினேசியர்கள் இடையே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒரு 
குழுவில் இருந்தவர்களின் காதுகள்நீண்டதாகவும், மற்ற குழுவில் 
இருந்தவர்களின் காதுகள் சிறியதாகவும் காணப்பட்டன. நீண்டகாதுகளை
உடையவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர். 
அவர்களே ஆட்சியும்  செய்தனர்  அவர்கள்  மற்றவர்களை  அடக்கி அடிமையாக  நடத்தினர். 

அதிகாரத்தில் உள்ளர்வர்களது உருவங்களை அடிமைகள் சிலைகளாக 
செதுக்க கட்டளையிட்டனர்.இதனால் தான் இங்குள்ள அனைத்துச் சிலைகளும்  காதுகள்  நீண்டதாக  உள்ளது  என  வரலாற்று தகவல்கள்  கூறுகின்றன.  இவை  அனைத்தும்  எரிமலை  அடிவாரத்தில்  செதுக்கப்பட்டன  என்றும் அவை கயிறு கொண்டு 150 அடிமைகளின் உதவியால் கொண்டுவர 
பட்டுள்ளன என்றும்தெரிவிகின்றது. இங்கு கயிறாக ஒரு வகை புற்கள்
 பயன்பட்டுள்ளன. இச்சிலைகளை தீவிற்குகொண்டு வர ஒரு மாத காலம் ஆகி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் வரலாற்றுஆய்வாளர்கள் .

 சுருக்கமாக சொல்லப்போனால் இச்சிலைகளை செய்ய அத்தீவில் உள்ள 
அனைவரின் உழைப்பும்தேவைப்பட்டிருக்க வேண்டும். இத்தீவில் உள்ள 
அனைவரும் சிலை வடிபதையே முக்கியதொழிலாக கொண்டுள்ளனர் என்று தெளிவாக புலப்படுகின்றது.

      எதற்காகச் சிலைகளை வடிப்பதை பற்றி மட்டுமே அவர்கள் கவலை 
பட்டிருக்க வேண்டும் ?  தங்கள்  உடல்   உழைப்பை  வேட்டையாடுதல், மீன் பிடித்தல்   போன்ற தங்கள்  உணவுத்  தேவைகளில் பயன்படுத்தாமல்  இதற்காக  மட்டுமே ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும் ?
       
 அவர்களுக்கு தலைவராக இருந்தவர் அல்லது தலைமைப் பொறுப்பில் 
இருந்தவர்கள், இந்தச்  சிலைகளை  வடிக்குமாறு  கடவுள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி இருக்க வேண்டும் .  சிலைகள்வடிக்காமல்  போனால்  கடவுள்  தண்டிப்பார் என்று பயமுருதிருக்க வேண்டும்.

இப்படித்தான் பல்வேறு ஆய்வாலர்கழலும் ஊகங்கள் அடிப்படையிலான 
கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்ஆனால் எதற்காக இத்தனை மனித சிலைகளை இத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளன என்றுஇன்று வரை 
கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே இருக்கிறது.

தற்பொழுது இத்தீவில் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் என்று 
கூறப்படுகின்றது .மேலும் மர்மம் தொடரும் 
Posted by sundar on 01:20 in    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search